Aug 9, 2026
Thisaigal NewsYouTube
ஆபாசமாக நடந்துக் கொண்ட முதியவருக்கு 18 நாள் சிறை
தற்போதைய செய்திகள்

ஆபாசமாக நடந்துக் கொண்ட முதியவருக்கு 18 நாள் சிறை

Share:

பாரிட் புந்தார், மார்ச்.12-

18 வயது பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு பேரா, பாரிட் புந்தார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 18 நாள் சிறைத் தண்டனை விதித்தது.

72 வயது ஸைனால் அபிடின் சப்ரி என்ற அந்த முதியவரின் இச்செயலை மாஜிஸ்திரேட் முகமட் ஷைபுஃல் அக்மால் முகமட் ராஸி கடுமையாகக் கண்டித்தார்.

ஓர் இளம் பெண்ணிடம் இவ்வாறு அருவருக்கத்தக்க நிலையில் நடந்து கொண்டது உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று அந்த முதியவரை நோக்கி, மாஜிஸ்திரேட் கடிந்து கொண்டார்.

இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த முதியவர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி பாரிட் புந்தாரில் உள்ள குளிர்பதனப் பெட்டிக் கடையில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்குற்றத்திற்கு இனி அபராதம் இல்லை. சிறைத்தண்டனையே பொருத்தமானதாகும். நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்திற்கு முதல் நாள்தான், சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறி, அந்த முதியவருக்கு, மாஜிஸ்திரேட் முகமட் ஷைபுஃல், 18 நாள் சிறைத் தண்டனையை விதித்தார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து