புத்ராஜெயா,ஜன22
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, 20 லட்சம் வெள்ளி பிணைப்பணைம் கேட்டு வர்த்தகப் பெண்மணியை கடத்திய குற்றத்திற்காக 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள்
சொத்துடைமை விற்பனையாளர்கள் இருவருரின் மேல்முறையீட்டை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று தள்ளுபடிசெய்தது.
50 வயது Lew Ngee Chin, 48 வயது Chin Yoon Tack என்ற அந்த இரு விற்பனையாளுக்கும் இரண்டு பிரம்படித் தண்டனை கொடுக்கவும் அப்பீல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்றாவது குற்றவாளியான Telaha Sanchis என்பவருடன் கூட்டாக சேர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பெட்டாலிங் ஜெயா, Taman SEA – யில் உள்ள நல்வாழ்வு மையத்தில் Lim Hoe என்ற பெண்மணியை கடத்தியதாக மூவரும் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.








