கோலாலம்பூர், ஜூலை 22-
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி, ஒரு மோசடிக்காரரைப் போல் முத்திரை குத்தி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக அவதூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கறிஞர் ஒருவரிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த மாதம் நடைபெற்ற ராக்யாட் லாவன் அன்வர் எனும் அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் வழக்கறிஞர் முஹம்மது ரஃபீக் ரஷித் நிகழ்த்திய உரை தொடர்பில் அவருக்கு எதிராக அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்று பெர்லீஸ் - ஸில் போலீஸ் புகார் செய்தது.
இதன் தொடர்பில் இன்று கங்கார் போலீஸ் நிலையத்தில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
1948 ஆம் ஆண்டு நிந்தனைச் சட்டத்தின் கீழ் அந்த வழக்கறிஞருக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது.








