May 26, 2026
Thisaigal NewsYouTube
ஆயிரம் அரசாங்கம் ஊழியர்கள் தொண்டூழியர்களாக களம் இறங்குவர்
தற்போதைய செய்திகள்

ஆயிரம் அரசாங்கம் ஊழியர்கள் தொண்டூழியர்களாக களம் இறங்குவர்

Share:

டிச. 7-

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு இதுவரை ஆயிரம் அரசாங்க ஊழியர்கள் தொண்டூழியர்களாக களம் இறங்கிருப்பத்தாக அரசாங்க தலைமைச் செயலாளர் Tan Sri Shamsul Azri Abu Bakar தெரிவித்துள்ளார்.

இன்று கெடா, கூலிம் நகராண்மை கழகத்திற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி , வெள்ளப்பேரிடரை எதிர்கொள்ள SKUAD IHSAN MADANI திட்டத்தின் கீழ் அரசுப்பணியாளர்கள் தொண்டூழியர்களாக களம் இறங்கி இருப்பதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக, அரசாங்க பொது பல்கலைக்கழகத்தில் 500 ஊழியர்கள் , நிதி அமைச்சியிலிருந்து 60 ஊழியர்கள் மற்றும் கல்வி அமைச்சு உட்பட இன்னும் சில அமைச்சுகளிலிருந்து அரசாங்க ஊழியர்கள், வெள்ளப் பாதிப்புக்கு இலக்காகியுள்ள மாவட்டங்களில் தொண்டூழியர்களாக களம் இறங்கி மக்களுக்கு உதவி வருகின்றனர் என்று டான் ஷம்சுல் குறிப்பிட்டார்.

வெள்ளத்தினால் பாதிப்பட்ட கிளாந்தானிலுள்ள 6 மாவட்டங்கள் , கெடாவில் 2 மாவட்டங்கள் இன்னும் சில மாநிலங்களில் Skuad Ihsan Madani திட்டத்தின் வாயிலாக உதவிகள் நல்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை வரை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,380 ஆயிரம் பேராகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, கூலிம் நகராண்மை கழகத்தை பார்வையிட்ட டான்ஸ்ரீ ஷம்சுல், பல்வேறு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று குறிப்பிட்டதுடன் தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிகழ்வில் கூலிம் நகராண்மை கழகத்தின் தலைமை அதிகாரி டத்தோ ஹஜி எல்மி யூசோப் மற்றும் சக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி & படம் : ஹேமா எம்.எஸ். மணியம்

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு