இரண்டு வாகனங்கள் மற்றும் ஒரு போலீஸ் ரோந்துக் கார் சம்பந்தப்பட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில் அந்த காணொளி பழையது என்று போலீஸ் துறை விளக்கம் அளித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சோங்கில் நிகழ்ந்த விபத்து, தீர்வு காணப்பட்டு விட்டது. இந்த விபத்துக்கு காரணமான குற்றவாளிக்கு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து, தண்டனை விதித்து விட்டதாக மஞ்சங் மாவட்ட போலீஸ் தலைவர் மோஹன்ட் நோர்டின் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் தேதி நிகழ்ந்ததாகும். இவ்விபத்து தொடர்பான காணொளியை ஜாக் என்ற பெயரில் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதை போலீஸ் துறை அடையாளம் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


