கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற கெடா மாநில சட்டமன்றத் தேர்தலின் போது வாக்களிப்புப் பெட்டியில் செலுத்துவதற்கு முன்பு அடையாளமிடப்பட்டுள்ள தமது வாக்குச்சீட்டை பொதுவில் பகிரங்கமாக காட்டியதாக கூறப்படும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர், விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் சனூசிக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் மீறல் சட்டத்தின் கீழ் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று ரஸாருதீன் குறிப்பிட்டார். இந்த விசாரணை எல்லா நிலைகளிலும் நியாயமான முறையில் நடைபெறும் என்று ஐஜிபி உறுதி அளித்துள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


