May 28, 2026
Thisaigal NewsYouTube
அனுவார் மூசா பதிலளிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

அனுவார் மூசா பதிலளிக்க வேண்டும்

Share:

தாப்பா, ஏப்ரல்.13-

கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாரு நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் பெரிகாதான் நேஷனல் அரசாங்கத்தின் தோல்விக்கு அனுவார் மூசா பதிலளிக்க வேண்டும் என்று பாஃமி பாஃட்சீல் வலியுறுத்தினார். அவர் ஆயர் கூனிங் சட்டமன்ற இடைத் தேர்தல் பரப்புரையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்ட மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும். பெரிகாதான் நேஷனல் ஆட்சியில் கட்டாய நிலம் கையகப்படுத்தல் நடந்ததாகவும், அதில் மூன்று அமைச்சர்கள் சம்பந்தப்பட்டதாகவும் பாஃமி பாஃட்சீல் குற்றம் சாட்டினார்.

பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூட, பெரிகாதான் நேஷனல் ஆட்சியில் நிலம் கையகப்படுத்தியவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். பாதிக்கப்பட்ட மக்களுடனான சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் மேம்பாட்டாளருக்கு ஆதரவாக இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அனுவார் மூசா அந்த நேரத்தில் கூட்டரசு பிரதேச அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்