Mar 31, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

Share:

ஜோகூர் மாநிலத்தில் நடந்த டீசல் கடத்தல் முயற்சியை, அம்மாநில உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சின் கிளையைச் சேர்ந்த அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பாசீர் கூடாங் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கூடுதல் கலன்கள் பொருத்தப்பட்ட லோரியின் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

இச்சோதனையின் போது, வாகனத்தின் முதன்மை கலனிலிருந்து டீசலை, மாற்றியமைக்கப்பட்ட கூடுதல் கலன்களுக்கு மாற்றுவதற்காக, இரண்டு பம்புகள் பொருத்தப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட கலன்களில் 800 லிட்டர் வரை டீசலைச் சேமிக்க முடியும் என்று மாநில இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா பொர்னோமோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அந்த வாகனத்தின் ஓட்டுநர், 1961-ஆம் ஆண்டு, விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்

UKM வளாகத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட ஆலயம்: சிலாங்கூர் அரசின் முடிவிற்காகக் காத்திருக்கும் பல்கலைக்கழகம்