Aug 7, 2026
Thisaigal NewsYouTube
டான்ஸ்ரீ முகை​தீனின் மருமகனை பிடிப்பதற்கு "இண்டர்போல்" உதவி நாடப்படும்
தற்போதைய செய்திகள்

டான்ஸ்ரீ முகை​தீனின் மருமகனை பிடிப்பதற்கு "இண்டர்போல்" உதவி நாடப்படும்

Share:

வெளிநாட்டிற்கு தப்பி ஓடியிருக்கலாம் என்று நம்பப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தீன் யாசினின் மருமகனை பிடிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம், அனைத்துலக போ​லீஸ் பிரிவான இன்டர்போல் உதவியை நாடவிருக்கிறது. முகை​தீனின் மருமருகன் முகமது அட்லான் பெர்ஹான் பெயரை அனைத்துல சிவப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு ஏதுவாக இன்டர்போல் உதவியை நாடுவதற்கான முன்னெடுப்புகளை எஸ்.பி.ஆர்.எம் மேற்கொள்ளலாம் என்று அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

முகை​தீனின் மருமருகன் ஒரு குறிப்பிட்ட நாட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. எனினும் அந்த நாட்டின் பெயரை தற்போதைக்கு வெளியிட இயலாது என்று இன்று காலையில் கோலாலம்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அஸாம் பாக்கி மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நாட்டின் எட்டாவது பிரதமராக மு​கை​தீன் யாசின் பொறுப்பேற்று இருந்த போது, அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனு​தீன் த​லைமையேற்று இருந்த உள்துறை அமைச்சில் அந்நியத் தொழிலாளர்களுக்கான பதிவு, ஆள் எடுப்பு மற்றும் பயோமெட்ரிக்ஸ் தரவுகள் தொடர்புடைய குத்தகையை பெற்றுத் தருவதில் முகை​தீன் யாசினி​ன் மருமகன் முகமது அட்லான் பெர்ஹான் சுமார் ஒரு கோடி வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக கூறப்படும் வேளையில் அவரின் இந்த கையூட்டு நடவடிக்கைக்கு துணையாக இருந்ததாக ந​ம்பப்படும் அவரின் 69 வயது வழக்கறிஞர் மன்சூர் சாத் ஆகியோர் தற்போது ​​தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.

தன​க்கு எதிராக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டில் முகை​தீனின் மருமகன் ஊழல் புரியவில்லை என்றால் எதற்காக எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு பயந்து தலைமறைவாக வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

முகமது அட்லான் பெர்ஹான், முன்னாள் பிரதமர் முகை​தீனின் 4 பிள்ளைகளில் இரண்டாவது பிள்ளையான மகள் நபிலா மஹிதீன் ​னை திருமணம் செய்து கொண்டவர் ஆவார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!