எல்மினா விமான விபத்து தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொள்வதை நிறுத்திக்கொள்ளுமாறு மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, பொது மக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இந்த நினைவுறுத்தலுக்கு பிறகும் பொது மக்கள் தொடர்ந்து அந்த கோர விபத்து தொடர்பான காணொளிகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை இருக்குமானால் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்துள்ளது.
எண்மர் பயணம் செய்த அந்த இலகு ரக விமானம், வானிலிருந்து செங்குத்தாக நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பிடித்துக்கொண்ட காட்சி,பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மனச்சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதுடன், அது அடிப்படை தார்மீக நெறிகளுக்கு முரணானதாகும் என்று அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி


