எல்மினா விமான விபத்து தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துக்கொள்வதை நிறுத்திக்கொள்ளுமாறு மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, பொது மக்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இந்த நினைவுறுத்தலுக்கு பிறகும் பொது மக்கள் தொடர்ந்து அந்த கோர விபத்து தொடர்பான காணொளிகளை பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை இருக்குமானால் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்துள்ளது.
எண்மர் பயணம் செய்த அந்த இலகு ரக விமானம், வானிலிருந்து செங்குத்தாக நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பிடித்துக்கொண்ட காட்சி,பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை மனச்சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதுடன், அது அடிப்படை தார்மீக நெறிகளுக்கு முரணானதாகும் என்று அந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


