நெகிரி செம்பிலான், ஜூன் 18-
பிறந்தது முதல் பெரியவராகும் வரையில் இந்து சமய, சம்பிரதாயங்களை தாம் கடைப்பிடித்து வந்திருப்பதால் தம்மை இஸ்லாமியர் அல்ல என்று அறிவிக்கக்கோரி வர்த்தகப் பெண்மணி ஒருவர் புத்ராஜெயாவில் உள்ள அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
தாம் ஒரு இஸ்லாமியப் பெண் அல்லர் என்று அறிவிக்கக்கோரி, 45 வயதுடைய அந்த மாது செய்து கொண்ட விண்ணப்பத்தை ரத்து செய்யுமாறு நெகிரி செம்பிலான் சமய மன்றம் செய்து கொண்ட எதிர் மனுவிற்கு கடந்த மார்ச் 18 ஆம் தேதி சிரம்பான் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அத்துடன் அந்தப் பெண் செய்து கொண்ட விண்ணப்பத்தை நிராகரிப்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் அத்தீர்ப்பை ரத்து செய்யக்கோரி, அந்த வர்த்தகப் பெண், அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் S. கார்த்திகேசன் தெரிவித்தார்.








