கோலாலம்பூர், ஜூலை 17-
வரும் சனிக்கிழமை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு தலைநகரைச் சுற்றியுள்ள மொத்தம் 14 சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
முக்கியப் பிரமுகர்களை அழைத்துச் செல்வதற்கும், போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை அமல்படுத்துவதற்கும் மூத்த மற்றும் இளைய காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட 387 உறுப்பினர்கள் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.








