Mar 27, 2026
Thisaigal NewsYouTube
கோயில்களில் நுழைந்து கொள்ளை, அறுவர் கைது
தற்போதைய செய்திகள்

கோயில்களில் நுழைந்து கொள்ளை, அறுவர் கைது

Share:

ஜார்ஜ் டவுன, ஆகஸ்ட் 28-

பினாங்கில் மூன்று மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நுழைந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் நான்கு ஆடவர்களையும், இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிலாங்கூரிலும், பினாங்கிலும் மேற்கொள்ளப்பட்ட ஐந்து சோதனை நடவடிக்கைகளில் உள்ளூரைச் சேர்ந்த 18 க்கும் 42 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.

பினாங்கில் செபெராங் பெரை தெங்கா, செபெராங் பெரை உதாரா மற்றும் செபராங் பேரை செளடன் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள கோயில்களில் நுழைந்து இவர்கள் கொள்ளையிட்டுள்ளதாக நம்பப்படுகிறது என்று டத்தோ ஹம்சா அகமது குறிப்பிட்டார்.

இந்த கொள்ளைக்கும்பல், கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு