Mar 23, 2026
Thisaigal NewsYouTube
சக நாட்டவரை கடத்தியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

சக நாட்டவரை கடத்தியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Share:

சக நாட்டவரை கடத்திய குற்றத்திற்காக ஐந்து வங்காளதேச பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Selangor, Shah Alam - மில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் வாயிலாக 20 க்கும் 35 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்நபர்கள் கைது செய்யப்பட்டதாக Timur Laut மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Razlam Ab Hamid தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை, நகரத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் 50 வயது மதிக்கத்தக்க ஆடவரிடமிருந்து போலீசாருக்கு புகார் ஒன்று கிடைக்கப் பெற்றதாக Razlam Ab கூறினார்.

பாதிக்கப்பட்ட அவ்வாடவருக்கு தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதில் தனது மகன் கடத்தப்பட்டிருப்பதாகவும் 200,000 வெள்ளி ரொக்கப் பணம் கொடுத்தால் மட்டுமே அவரை விடுதலை செய்ய முடியும் என்று அச்சுறுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததாக Razlam Ab விவரித்தார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் வேளை, இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 365 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் தகவல் அளித்தார்.

Related News