May 6, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி நெருக்கடி: அடுத்த ஆண்டு முதல் பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இரு வேளை பள்ளி நேர முறை அமல்
தற்போதைய செய்திகள்

பள்ளி நெருக்கடி: அடுத்த ஆண்டு முதல் பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இரு வேளை பள்ளி நேர முறை அமல்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.27-

நகரப்புற பள்ளிகளில் நிலவும் மாணவர் கூட்ட நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, குறிப்பாக பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் இரு வேளை பள்ளி நேரங்கள் அமல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இன்று மக்களவையில் நடைபெற்ற கேள்வி-பதில் நேரத்தின் போது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்விவரத்தை வெளியிட்டார்.

நகரங்களில் உள்ள பள்ளிகள் அதிக மாணவர் எண்ணிக்கையுடன் நெருக்கடியாக உள்ளன. அதே வேளை கிராமப்புற மற்றும் உட்புறப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதிச் செய்ய, நெருக்கடி மிகுந்த பள்ளிகளில் பாலர் பள்ளி மற்றும் புதிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்குத் தற்காலிகமாக இரு வேளை வகுப்புகளை நடத்த கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

ஒரே வேளை பள்ளி என்பது இலட்சியமாக இருந்தாலும், தற்போதைய சூழலில் கல்வியின் தரத்தைப் பாதிக்காமல் இருக்க இந்த உடனடி நடவடிக்கை அவசியமாகிறது என்று பிரதமர் விளக்கினார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்