உலு சிலாங்கூர் பகுதியில், இன்றிரவு வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா கணித்துள்ளது.
பினாங்கு, கெடா, பேரா, பகாங், ஜோகூர், சரவாக், சபா ஆகிய மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களிலும் இதே வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
வானிலை தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு பொதுமக்கள் மெட் மலேசியா இணையத்தளத்தையோ அல்லது அதன் சமூக ஊடகப் பக்கங்களையோ பார்வையிடலாம்.







