வீடமைப்புப்பகுதி அருகில் சாலையில் திடீரென்று குறுக்கே ஓடிய நான்கு வயது சிறுவன் ஒருவன், வாகனத்தில் மோதப்பட்டு உயிரிழந்தான். இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, சுங்ஙை வே, ஜாலான் எஸ்எஸ் 9A/8 இல் நிகழ்ந்தது. நிஸ்ஸான் X - த்ரெல் ரக காரினால் மோதப்பட்ட அந்நிய நாட்டைச் சேர்ந்த அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக பெட்டாலிாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் தெரிவித்தார். சிறுவனை மோதுவதிலிருந்து தவிர்க்க சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர், பிரேக்னை முழு வீச்சில் அழுத்தியும், கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம், சிறுவனை மோதித்தள்ளியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மொஹமாட் ஃபக்ருடின் குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


