பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்த அமைச்சவை சீரமைப்பில் பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அமைச்சரவை சீரமைப்பில் இந்திய சமூகத்தை சேர்ந்த யாரும் அமைச்சராக நியமிக்கப்படாதது ஒரு பெரும் ஏமாற்றமாகும் என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
எனினும் கோபிந்த் சிங் டியோ, இலக்கவியல் அமைச்சராக நியமிக்கப்ட்டு இருப்பது சர்ச்சைக்குரியது அல்ல. அனைத்து சமூகத்தினரும் எதிர்நோக்கக்கூடிய விவகாரங்களை விவாதிக்கக்கூடிய ஆற்றலை புதிய அமைச்சரவை கொண்டுள்ளது என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.








