Dec 3, 2025
Thisaigal NewsYouTube
இஸ்ரேலின் நடவடிக்கை கடற்கொள்ளையைத் தவிர வேறில்லை: சார்ல்ஸ் சந்தியாகோ
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலின் நடவடிக்கை கடற்கொள்ளையைத் தவிர வேறில்லை: சார்ல்ஸ் சந்தியாகோ

Share:

ஷா ஆலாம், அக்டோபர்.02-

காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நிவாரணப் பொருட்களுடன் தன்னார்வலர்களை ஏற்றிச் சென்ற Global Sumud Flotilla கப்பலை அனைத்துலக கடற்பகுதியில் இடைமறித்து சிறைப்பிடித்து இருக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை கடற்கொள்ளையைத் தவிர வேறொன்றும் இல்லை என்று கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ வர்ணித்துள்ளார்.

Global Sumud Flotilla கப்பலை தடுத்து நிறுத்துவதற்கும், சிறைப்பிடிப்பதற்கும் இஸ்ரேலுக்கு எந்த அதிகார வரம்பும் இல்லை என்று சார்ல்ஸ் குறிப்பிட்டார். அனைத்துலக கடற்பகுதியில் பொதுமக்களைத் தடுத்து வைக்க இஸ்ரேலுக்கு எந்த சட்டப்பூர்வமான காரணமும் இல்லை. அதே வேளையில் அனைத்துலக சட்டத்தை இஸ்ரேல் முழுமையாக புறக்கணிக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ஒரு மனிதாபிமானப் பணியை ஆணவத்துடன் அடக்க இஸ்ரேல் முற்படுகிறது என்று சார்ல்ஸ் குறிப்பிட்டார்.

காசாவின் பட்டினியால் வாடும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகளை இடை மறித்து பறிமுதல் செய்வது பாதுகாப்பான செயல் அல்ல, அது கூட்டுத் தண்டனைக்குரியது மற்றும் போர்க்குற்றமாகும் என்று Charles சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்குவது ஒரு குற்றமா? என்று கேள்வி எழுப்பிய Charles, மலேசியர்கள் உட்பட அனைத்து ஆர்வலர்களையும் சட்டவிரோதமாக தடுத்து வைத்திருக்கும் இஸ்ரேலின் நடவடிக்கையை தாங்கள் கடுமையாக கண்டிப்பதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்