Dec 16, 2025
Thisaigal NewsYouTube
டிக்கெட் விலை அதிகரிப்பா? - ஏர்போர்னியோ நிறுவனம் மறுப்பு
தற்போதைய செய்திகள்

டிக்கெட் விலை அதிகரிப்பா? - ஏர்போர்னியோ நிறுவனம் மறுப்பு

Share:

கூச்சிங், டிசம்பர்.16-

சரவாக் மாநில அரசுக்குச் சொந்தமான விமான நிறுவனமான ஏர்போர்னியோ, தனது பயண டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து எழுந்த விமர்சனங்களை மறுத்துள்ளது.

அண்மையில், ஏர்போர்னியோவின் டிக்கெட் முன்பதிவுக்கான வலைத்தளம் தொடங்கப்பட்டதையடுத்து, பொதுமக்கள் பலர், டிக்கெட்டுகளின் விலை மிகவும் கூடுதலாக உள்ளதாக சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அதற்குப் பதிலளித்துள்ள ஏர்போர்னியோ நிறுவனம், இதற்கு முன்பு MASwings நிறுவனம் வசூலித்த கட்டணங்களின் அளவிலேயே தாங்களும் வசூலிப்பதாகத் தெரிவித்துள்ளது.

விமானங்களின் செயல்பாட்டு நிலைத்தன்மையை உறுதிச் செய்யும் கட்டண அமைப்புகளின் அடிப்படையில், நியாயமான முறையிலேயே கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் ஏர்போர்னியோ குறிப்பிட்டுள்ளது.

கடந்த மாதம் MASwings நிறுவனத்தை AirBorneo Holdings Sdn Bhd கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல், விமானச் சேவையை துவங்கவுள்ளது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி முன்பதிவுக்கான வலைத்தளம் திறக்கப்பட்ட நிலையில், ஜனவரி 14-ஆம் தேதி முதல் பயணங்களுக்கான முன்பதிவுகள் துவங்கியுள்ளன.

Related News

நாடு, இந்திய சமூகம் உட்பட மலேசியர்களின் நம்பிக்கையை உறுதிச் செய்ய அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன்: மனித அமைச்சாக நியமிக்கப்பட்ட டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் உறுதி

நாடு, இந்திய சமூகம் உட்பட மலேசியர்களின் நம்பிக்கையை உறுதிச் செய்ய அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன்: மனித அமைச்சாக நியமிக்கப்பட்ட டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் உறுதி

ஜாலான் ராசாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: மேலும் இருவர் கைது

ஜாலான் ராசாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: மேலும் இருவர் கைது

மலாக்கா மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் மூவாயிரம் மாணவர்கள் பள்ளிக்கு மட்டம்

மலாக்கா மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் மூவாயிரம் மாணவர்கள் பள்ளிக்கு மட்டம்

குடிநுழைவுத்துறை திடீர் சோதனை: 90 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

குடிநுழைவுத்துறை திடீர் சோதனை: 90 சட்டவிரோதக் குடியேறிகள் கைது

ஜெலுத்தோங்கில் சண்டை தொடர்பில் ஆறு பேர் கைது

ஜெலுத்தோங்கில் சண்டை தொடர்பில் ஆறு பேர் கைது

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: சமரசங்கள் இன்றி வெளிப்படையான முறையில் விசாரணை - பிரதமர் அன்வார் உறுதி

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: சமரசங்கள் இன்றி வெளிப்படையான முறையில் விசாரணை - பிரதமர் அன்வார் உறுதி

டிக்கெட் விலை அதிகரிப்பா? - ஏர்போர்னியோ நிறுவனம் மறுப்பு | Thisaigal News