கோத்தா கினபாலு, மார்ச்.02-
சபா, ரணாவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாற்றுத் திறனாளிப் பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை 25 வயது இளைஞர் ஒருவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
இன்று கோத்தா கினபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஹூர்மான் ஹுசேன் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அவர் தான் குற்றமற்றவர் எனத் தெரிவித்தார்.
இந்தக் கடுமையான குற்றச்சாட்டைப் பதிவு செய்த அரசுத் தரப்பு துணை வழக்கறிஞர் Fazriel Fardiansyah Abdul Kadir, பிணை வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். குற்றஞ்சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு மிக அருகிலேயே வசிப்பதால், பிணை வழங்கப்பட்டால் அது சாட்சிகளைக் கலைக்கவோ அல்லது பாதிக்கப்பட்டவருக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவோ வாய்ப்புள்ளது என்ற கருத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, அந்த இளைஞரைத் தடுப்புக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.








