புத்ராஜெயா, மார்ச்.02-
திருக்குர்ஆனை மிதித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உயர்க்கல்விக்கூட மாணவர் எஸ். விக்னேஸ்வரன் மீது நாளை நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
போலீஸ் துறை சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், சந்தேக நபரான விக்னேஸ்வரன் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புனிதப் புத்தகமான திருக்குர்ஆனை மிதித்ததன் மூலம், இஸ்லாம் மதத்தைத் அவமதிக்கும் நோக்குடன் புனிதப் பொருளைச் சேதப்படுத்தியதாகத் குற்றவியல் சட்டப் பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்படவுள்ளது.








