Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரில் மரணத் தண்டனை முறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரில் மரணத் தண்டனை முறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.26-

2026 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் உலகளாவிய காலமுறை மதிப்பாய்வு மாநாட்டில் பங்கேற்கவிருக்கும் ஐ.நா. உறுப்பு நாடுகள், சிங்கப்பூரில் நடைமுறையில் இருந்து வரும் மரணத் தண்டனை முறை, மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும் என்று நான்கு மனித உரிமை குழுக்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக ஒரு மலேசியப் பிரஜையான 39 வயது கே. தட்சணாமூர்த்திக்கு நேற்று மரணத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனித உரிமைக் குழுக்கள் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளன.

சிங்கப்பூரைத் தளமாக கொண்ட திங்க் செண்டர் மற்றும் தாய்லாந்தின் ஃபோரும் ஆசியா ஆகியவற்றுடன் இணைந்து மலேசியாவில் சுவாராம் மற்றும் பூசாட் கோமாஸ் ஆகியவை இன்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளன.

சிங்கப்பூரில் மரணத் தண்டனை முறை மறுபரிசீலனை செய்யப்பட்டு ரத்து செய்யப்பட வேண்டும். ஏற்கனவே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளில் தண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும் என்று அந்த மனித உரிமைக் குழுக்கள் தங்கள் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளன.

Related News

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

நியூசிலாந்து குடியுரிமை தருவதாகக் கூறி 1.33 லட்சம் ரிங்கிட் மோசடி: பாலர் பள்ளி ஆசிரியை மீது நாளை குற்றச்சாட்டு

"பெக்கான் நானாஸில் மீண்டும் ஒரு இரத்தக் களரி வேண்டாம்!" –  இளைஞரின் குடும்பம் அவசரக் கோரிக்கை!

"பெக்கான் நானாஸில் மீண்டும் ஒரு இரத்தக் களரி வேண்டாம்!" – இளைஞரின் குடும்பம் அவசரக் கோரிக்கை!

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

கைதிகள் மீதான தாக்குதல்: தைப்பிங் சிறைக்காவலர்கள் 5 பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்