Apr 18, 2026
Thisaigal NewsYouTube
ஆலயப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு: பேராக் அரசு உறுதி - டத்தோ அ. சிவநேசன்
தற்போதைய செய்திகள்

ஆலயப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு: பேராக் அரசு உறுதி - டத்தோ அ. சிவநேசன்

Share:

பேராக் மாநிலத்தில் ஆலயங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்க மாநில அரசு உறுதியாக இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

பழைய காலங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டு இடங்களே தற்போதைய சட்டச் சிக்கல்களுக்குக் காரணம் என்றார். ஆலயங்களை உடனடியாக அகற்றுவதைத் தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் அனுமதி அல்லது மாற்று இடங்களை அரசு வழங்கி வருவதாக அவர் விளக்கினார்.

இதற்குச் சான்றாக, பாகான் டத்தோ, ஜெண்டராட்டாவில் அ மையவுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை டத்தோ சிவநேசன் சுட்டிக்காட்டினார்.

ஜெண்டராட்டா பகுதியில் சுமார் ஒரு மில்லியன் ரிங்கிட் செலவில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆலய கட்டுமானத்திற்கு பேராக் மாநில அரசு சமீபத்தில் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது என்பதை டத்தோ சிவநேசன் விளக்கினார்.

நேற்று பேரா மாநில அரசு செயலக கட்டட அலுவலகத்தில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தலைவர் ஓம்ஸ்.தியாகராஜனுடன் இயக்க உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டத்தோ அ.சிவநேசன் இவ்வாறு தெரிவித்தார்.

மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி ஆலய கட்டுமானத்திற்கு அனுமதி வாங்கித் தந்த ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சிவநேசனுக்கு ஆலயப் பொறுப்பாளர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Related News

ஊடகவியலாளர்களுக்கு 300 லிட்டர் பெட்ரோல் மானியம்: அமைச்சரவையில் பரிந்துரைக்கிறார் பாஹ்மி பாட்சில்

ஊடகவியலாளர்களுக்கு 300 லிட்டர் பெட்ரோல் மானியம்: அமைச்சரவையில் பரிந்துரைக்கிறார் பாஹ்மி பாட்சில்

3,400 லிட்டர் மானிய டீசல் கடத்தல் முறியடிப்பு: சிலாங்கூர் KPDN நடவடிக்கை

3,400 லிட்டர் மானிய டீசல் கடத்தல் முறியடிப்பு: சிலாங்கூர் KPDN நடவடிக்கை

உலக அரங்கில் உண்மையை உரக்கச் சொல்ல மலேசியா அஞ்சாது: பிரதமர் அன்வார்

உலக அரங்கில் உண்மையை உரக்கச் சொல்ல மலேசியா அஞ்சாது: பிரதமர் அன்வார்

தர்மம் வென்றது: அண்ணன்மார்களின் 'கடன்' வாதத்தை முறியடித்து வழக்கறிஞர் வேல் மனோகரன் நீதிமன்றத்தில் அதிரடி வெற்றி

தர்மம் வென்றது: அண்ணன்மார்களின் 'கடன்' வாதத்தை முறியடித்து வழக்கறிஞர் வேல் மனோகரன் நீதிமன்றத்தில் அதிரடி வெற்றி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாகிஸ்தான் நபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாகிஸ்தான் நபர் கைது

புனே விமான நிலையம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது: ஒரே இரவில் 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

புனே விமான நிலையம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது: ஒரே இரவில் 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து