Apr 1, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத் திறனாளிப் பெண்ணை அழைத்துச் சென்ற வர்த்தகர் கைது
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளிப் பெண்ணை அழைத்துச் சென்ற வர்த்தகர் கைது

Share:

மலாக்கா, ஏப்ரல்.07-

உல்லாசத்திற்காக அறிமுகமில்லாத மாற்றுத் திறனாளிப் பெண்ணை அழைத்துச் சென்ற வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மலாக்கா, தாமான் ரம்பாய் இடாமான் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய அந்த மாற்றுத் திறனாளிப் பெண்ணை, கடந்த இரண்டு தினங்களாக காணவில்லை என்று குடும்பத்தினர் புகார் அளித்து இருந்தனர்.

இந்நிலையில் அந்தப் பெண்ணுடன் 40 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர், கெடா, சுங்கை பட்டாணி, ஜாலான் ஜாத்தியில் இன்று அதிகாலை 4 மணியளவில் பிடிபட்டதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

சிரம்பான், ஈப்போ, புக்கிட் மெர்தாஜம், பாலிங் ஆகிய பகுதிகளில் அந்தப் பெண்ணுடன் வர்த்தகர் சுற்றித் திரிந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடச் சென்ற அந்த மாற்றுத் திறனாளிப் பெண், பின்னர் வீடு திரும்பவில்லை என்று குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர் என்று கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வர்த்தகர், போதைப்பொருள் தொடர்பாக ஏற்கனவே குற்றப் பதிவுகளைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்