DAESH தீவிரவாத கூறுகளுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் உள்ளூர் பல்கலைக்கழகம் ஒன்றின் முன்னாள் மூத்த விரிவுரையாளர் மற்றும் இல்லத்தரசி உட்பட மொத்தம் எட்டு பேர் SOSMA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜுன் 22, 23 ஆகிய தேதிகளில் நான்கு மாநிலங்களில் ஏககாலத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஆறு ஆண்களும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு சிறப்பு நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு சட்டடமான SOSMA விதிகளுக்கு ஏற்ப அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த எட்டு பேரிடம் போலீசார் நடத்திய பூர்வாங்க விசாரணையில் அவர்கள் மாமன்னர், பிரதமர் மற்றும் அரச மலேசிய போலீஸ் படையின் உயர் அதிகாரிகளுக்கு எதிராக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.








