புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் தேசிய தின மாதாந்திரக் கூட்டத்தில், சாலைப் பாதுகாப்பு தொடர்பான புதிய முயற்சி ஒன்றை சாலைப் போக்குவரத்துத் துறையான ஜே.பி.ஜே அறிமுகப்படுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
அனிமேஷன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து, சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு அனிமேஷன் படைப்புகளை ஜே.பி.ஜே தயாரிக்கவுள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக, பள்ளிப் பருவத்திலிருந்தே குழந்தைகளிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும் என்று அந்தோணி லோக் விவரித்தாரதெரிவித்தார்.
குழந்தைகள் சாலை விதிகளைப் பின்பற்றுவது தொடர்பாக தங்களது பெற்றோருக்கு அறிவுறுத்துவதன் மூலம், பெற்றோரின் வாகனம் செலுத்தும் பழக்கத்திலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் கூறினார்.
சாலைப் பாதுகாப்பு செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான அணுகுமுறைகள் அவசியம் எனக் குறிப்பிட்ட லோக், ஜே.பி.ஜே-யின் இந்த முயற்சியை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனா சந்திரன் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.









