கோம்பாக் எல்ஆர்டி நிலையத்தில் இன்று காலை பயணி ஒருவர் மயக்கமடைந்து தண்டவாளத்தில் விழுந்ததாக ரேபிட் கேஎல் தெரிவித்துள்ளது.
காலை 9.05 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், உடனடியாக பாதுகாப்பு கருதி எனப்படும் அவசர நிறுத்து அமைப்பு செயல்படுத்தப்பட்டு, தண்டவாளத்துக்கான மின்சாரம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதாகவும் கூறியது.
தண்டவாளத்தில் விழுந்த பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வரும் வரை அவசர அறையில் வைக்கப்பட்டார். பின்னர், மேலதிக பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கோலாலம்பூர் தாவாக்கல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனிடையே, தண்டவாளம் பாதுகாப்பான நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரயில் சேவை காலை 9.12 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டது என்று ரேபிட் கே.எல். தெரிவித்தது.








