பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் வேலை செய்து வந்த மலேசியர் ஒருவர், கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த மலேசியரை விடுவிப்பதற்கு 3 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி பிணைப்பணம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ ரம்லி யூசோஃப் தெரிவித்தார்.
அந்த மலேசியர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி கடத்தப்பட்டுள்ளார். மறுநாள் பிணைப்பணம் ஒப்படைக்கப்ட்டுள்ளது. ஆனால், அவரின் உடல், பிலிப்பைன்ஸ், பம்பங்கா மாநிலத்தில் சன் சைமன் நகரில் கண்டு பிடிக்கப்பட்டதாக ரம்லி யூசோஃப் குறிப்பிட்டார்.
இது தொடர்பான தகவலை மணிலாவிலிருந்து மலேசிய போலீஸ் துறை கடந்த நவம்பர் 9 ஆம் தேதி பெற்றதாக அவர் மேலும் கூறினார்.








