Jul 4, 2026
Thisaigal NewsYouTube
அடிப்படை வசதித் திட்டங்களில் மெத்தனப் போக்கு ஏன்?  கவுன்சிலர் யோகேஸ்வரி கேள்வி
தற்போதைய செய்திகள்

அடிப்படை வசதித் திட்டங்களில் மெத்தனப் போக்கு ஏன்? கவுன்சிலர் யோகேஸ்வரி கேள்வி

Share:

ஷா ஆலாம், ஜூலை.26-

வெள்ளம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதி தொடர்பான அனைத்து விவகாரங்களிலும் புக்கிட் கெமுனிங் வட்டாரத்தை உள்ளடக்கிய ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 14வது மண்டலம் புறக்கணிக்கப்படுவது ஏன் என்று அதன் பொறுப்பாளரான கவுன்சிலர் யோகேஸ்வரி சாமிநாதன் வினவினார்.

புகார்கள் மீது தாமதமான நடவடிக்கை, அடிப்படை வசதிகள் அறவே இல்லாதது, சாலையில் பழுதுகள் நீண்ட காலம் சரி செய்யாமல் இருப்பது, கைவிடப்பட்ட விளையாட்டு மைதானங்கள் போன்ற பல பிரச்சினைகள் இப்பகுதி குடியிருப்பாளர்களைப் பெரும் அதிருப்திக்குள்ளாக்கி இருப்பதாக யோகேஸ்வரி கூறினார்.

சேவை அளிப்பு, அடிப்படை வசதிகளின் தரத்தை உயர்த்துதல், மேம்பாடு ஆகியவற்றில் இப்பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய போக்கு புக்கிட் கெமுனிங் வட்டாரத்தை மாநகர் மன்றம் மாற்றாந்தாய் பிள்ளை போல் நடத்துவதாக ஓர் எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது என்றார்.

புக்கிட் கெமுனிங் உள்பட மாநகரின் அனைத்து பகுதிகளும் நியாயமாகவும் சமநிலையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று அண்மையில் நடந்த மாநகர் மன்றத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டார்.

புக்கிட் கெமுனிங் வட்டாரமும் ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஒரு பகுதி என்பதை மறந்து விடலாகாது என்றார்.
தவிர, இவ்வட்டார மக்களும் வரி செலுத்துகின்றனர். மாநகர் மன்றத்தின் அனைத்து முயற்சிகளுக்கும் தோள் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வட்டாரத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தும்படி மாநகர் மன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது