May 24, 2026
Thisaigal NewsYouTube
நெங்கிரி நீர்மின்சார அணையின் கட்டுமானத்தால் பாதிக்கப்பட்ட போஸ் தோஹோய், போஸ்
தற்போதைய செய்திகள்

நெங்கிரி நீர்மின்சார அணையின் கட்டுமானத்தால் பாதிக்கப்பட்ட போஸ் தோஹோய், போஸ்

Share:

குவா முசாங் , ஆகஸ்ட் 21-

நெங்கிரி நீர்மின்சார அணையின் கட்டுமானத்தால் பாதிக்கப்பட்ட போஸ் தோஹோய், போஸ் புலாட் மற்றும் கம்பொங் வியாஸ் ஆகிய இடங்களில் உள்ள 245 பூர்வக்குடி குடும்பங்களுக்கு பயிர் மற்றும் தோட்ட சேதங்களுக்கான இழப்பீடாக மொத்தம் 10 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் சமூகத்திற்கு இழப்பீடு வழங்கத் தொடங்கியதாக TNB பவர் ஜெனரேஷன் Sdn Bhd நிர்வாக இயக்குனர் முகமது நஸ்ரி பாசில் தெரிவித்தார்.


அந்த பூர்வக்குடியினருக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் அணை கட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பதால் இது கொடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
மேலும், வீடுகள், பள்ளி, சுராவ், கழிப்பறைகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற பிற வகையான இழப்பீடுகளையும் TNB வழங்குகிறது என்று அவர் இன்று போஸ் தோஹோய் இல் செய்தியாளர்களிடம் கூறினார்!

Related News