Mar 31, 2026
Thisaigal NewsYouTube
அடிதடியில் இறங்கிய முதியவருக்கு 1,500 ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

அடிதடியில் இறங்கிய முதியவருக்கு 1,500 ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், டிச.9-


இரண்டு மாதங்களுக்கு முன்பு, கார் நிறுத்தும் இடத்தை கைப்பற்றுவதில் ஏற்பட்ட தகராற்றில் ஆடவரை தாக்கிய குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 1,500 வெள்ளி அபராதம் விதித்தது.

அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஒரு மாத சிறைத்தண்டனையை விதிப்பதாக மாஜிஸ்திரேட் மரிஸ்கா கலிஸான் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் பெரிசாவில் சாலையோரத்தில் 42 வயது நபரை தாக்கியதாக 68 வயது எங் ஹொங் சாய் என்பவர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News