May 21, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன்

Share:

லஞ்ச ஊழல், சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் நாட்டின் முன்னாள் நிதி அமைச்சரும், துன் மகாதீர் முகமதுவின் நெருங்கிய நண்பருமான துன் டைம் ஜைனுதீன், தற்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.

துன் மகாதீரின் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சராக நீண்ட காலம் பதவி வகித்தவரான அம்னோ முன்னாள் பொருளாளருமான டைம் ஜைனுதீன் – னை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தற்போது விசாரணை செய்து வருவதை அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி இன்று உறுதி செய்தார்.

கோலாலம்பூர் மாநகரில் பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்திற்கு அருகில் உள்ள டாயிம் ஜைனுதீனின் குடும்பத்திற்கு சொந்தமான 270 கோடி வெள்ளி மதிப்புள்ள 60 மாடிகளை கொண்ட MENARA ILHAM கட்டட கோபுரத்தை எஸ்.பி.ஆர்.எம் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து அந்த கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு அந்த முன்னாள் நிதி அமைச்சருக்கு 270 கோடி வெள்ளி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து எஸ்.பி.ஆர்.எம் தற்போது விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.

ஜைனுதீனின் குடும்பத்திற்கு சொந்தமான அந்த கட்டடத்தை எஸ்.பி.ஆர்.எம் பறிமுதல் செய்தாலும் அந்த கட்டடத்தின் அன்றாட நடவடிக்கைகளில் எந்தவொரு பாதிப்பும் இருக்காது என்றுஆசம் பாக்கி உறுதி அளித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு சொந்தமான 230 கோடி வெள்ளி முறைகேடு தொடர்பில் டாயிம் ஜைனுதீனையும், டான்ஸ்ரீ அந்தைஸ்தைக் கொண்ட அவரின் வர்த்தக சகாவையும் எஸ்.பி.ஆர்.எம் விசாரணை செய்து வரும் அதேவேளையில் அந்த விசாரணையின் ஒரு பகுதியாக கோலாலம்பூர் மாநகரில் நில அடையாளத்தை தாங்கிய அந்த கட்டட கோபுரம் பறிமுதல் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

Related News

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்