Mar 14, 2026
Thisaigal NewsYouTube
கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் மார்ச் 14 இல் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் மார்ச் 14 இல் தீர்ப்பு

Share:

முன்னாள் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ அந்தோனி கெவின் மொரைஸ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ மருத்தவமனையின் முன்னாள் மருத்துவர் டாக்டர் ஆர். குணசேகரன் உட்பட ஆறு இந்திய நபர்கள் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கில் வரும் மார்ச் 14 ஆம் தேதி புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவிருக்கிறது.

60 வயது டாக்டர் குணசேகரன், 52 வயது எஸ். ரவிச்சந்திரன், 31 வயது ஆர். டினிஷ்வரன், 30 வயது ஏ.கே தினெஷ் குமார், 33 வயது எம். விஷ்வனாத், 30 வயது எஸ்.நிமலன் ஆகியோரின் வாதங்களை செவிமடுத்தப் பின்னர் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ அஹ்மாட் சைடி இப்ராஹிம் தீர்ப்பின் தேதியை அறிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 7 மணியளவில் அரசு தரப்பு வழக்கறிஞர் கெவின் மொரைஸ்– யை கடத்திச் சென்று, சுபாங், ஜாலான் உஎஸ்ஜெ 1/6D என்ற முகவரியில் உள்ள ஒரு பட்டறையில் கொலை செய்து சடலத்தை தோம்பு ஒன்றில் அடைத்து, சிமெண்ட் பூசி, புதரில் எறிந்த குற்றத்திற்காக அறுவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்