நடப்பு அரசை கவிழ்ப்பதற்கான சதிதிட்டங்கள் தீட்டுபவர்கள் நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள் என மலேசிய நாட்டின் அமெரிக்க தூதரகர் டத்தோ ஶ்ரீ முகமட் நஸ்ரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார். நாட்டின் அரசாங்கம் மற்றும் அரசியல் நிலை மாறுமெனில் வெளிநாட்டவர்களின் முதலீட்டு நம்பிக்கையை மீண்டும் பெறுவது கடினம் என அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை முன் வைத்துதான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்கின்றார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என முகமட் நஸ்ரி அட்ஸ்ரோ அவாணி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








