Jul 4, 2026
Thisaigal NewsYouTube
நீதித்துறையில் எந்த தலையீடும் இல்லை, புதிய நியமனங்கள் நிரூபிக்கின்றன: பிரதமர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

நீதித்துறையில் எந்த தலையீடும் இல்லை, புதிய நியமனங்கள் நிரூபிக்கின்றன: பிரதமர் கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.18-

நாட்டின் நீதித்துறையில் உயர்நிலைப் பொறுப்புகளுக்கு புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பது நீதி பரிபாலனத்தில் எந்தத் தலையீடும் இல்லை என்பதை நிரூபிக்கிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

புதிய நியமனங்களை அறிவிப்பதில் ஏதேனும் தாமதங்கள் ஏற்பட்டு இருக்குமானால், நியமன செயல்முறையில் ஏற்பட்ட கால தாமதமாக இருக்கும் பிரதமர் விளக்கினார்.

நாட்டின் தலைமை நீதிபதி உட்பட முக்கியப் பொறுப்புகள் நிரப்பப்பட்டு விட்டன. இந்நிலையில் நீதித்துறையில் என்ன நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் வினவினார்.

இன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நீதிபதிகள் நியமனத்தில் யாரையும் புறக்கணிக்கவில்லை. அதே வேளையில் நீதிபதிகள் நியமன ஆணையத்திற்கு எந்தவொரு நீதிபதியையும் தாம் பரிந்துரைக்கவில்லை என்று பிரதமர் விளக்கினார்.

நீதிபதிகள் நியமன ஆணையம் முன் வைத்தப் பரிந்துரைக்கு ஏற்பட நீதிபதிகள் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொன்னால், முந்தைய அரசு நிர்வாகங்களைப் போல் தாம் எந்த முடிவுகளிலும் தலையிட்டதில்லை என்றும் நீதிபதிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்ததும் இல்லை என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.

நீதித்துறை சுதந்திரம் எல்லாக் காலக் கட்டங்களிலும் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதுவே தமது விருப்பமாகும் என்று அன்வார் விளக்கினார்.

நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லேவும், அப்பீல் நீதிமன்றத் தலைவராக டத்தோ அபு பாக்கார் ஜாயிஸும், சபா, சரவாக் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக டத்தோ அஸிஸா நவாவியும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமினால் நியமிக்கப்பட்டு இருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் அன்வார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது