கோலாலம்பூர், லெம்பா பந்தாய் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் 11-வது மாடியிலிருந்து கீழே விழுந்த 24 வயது இளைஞர் உயிரிழந்தார்.
வீட்டில் அந்த இளைஞர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகக் கூறி, அவரது தாயார் நேற்று இரவு 10.57 மணியளவில் போலீசாரிடம் உதவி கோரினார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, இளைஞர் தப்பிச் சென்று கட்டடத்தின் விளிம்புப் பகுதிக்குச் சென்றுள்ளார். பின்னர் 11-வது மாடியிலிருந்து 10-வது மாடிக்குக் கீழிறங்க முயன்றபோது தவறி விழுந்ததாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹுக் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை பல்கலைக்கழக மலாயா மருத்துவ மைய மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்தச் சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது








