Feb 13, 2026
Thisaigal NewsYouTube
நிச்சயதார்த்தப் பெண் ஏமாற்றியதால் ஆத்திரம்: சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டிய முன்னாள் காதலன் - சபாவில் பயங்கரம்
தற்போதைய செய்திகள்

நிச்சயதார்த்தப் பெண் ஏமாற்றியதால் ஆத்திரம்: சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டிய முன்னாள் காதலன் - சபாவில் பயங்கரம்

Share:

கோத்தா கினபாலு, பிப்ரவரி.13-

சபாவில் 44 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, பணம் மற்றும் பொறாமை ஆகியவை முக்கியக் காரணமாக இருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் முன்பு நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். அந்த காலகட்டத்தில் அந்தப் பெண் சந்தேக நபரின் சுமார் 7,000 ரிங்கிட் பணத்தைப் பயன்படுத்தியதாகவும், ஆனால் இறுதியில் அவரைத் திருமணம் செய்யாமல் வேறு ஒருவரை மணந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரமும் பொறாமையுமே இந்தத் துயரமான கொலைக்கு வழிவகுத்துள்ளது.

சம்பவத்தன்று அந்தப் பெண் சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்ற போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது சந்தேக நபரும் அவரது மகனும் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர்.

சபா போலீஸ் கமிஷனர் Datuk Jauteh Dikun கூறுகையில், இந்தக் கொலையில் சந்தேக நபர் பயங்கரமான ஆயுதத்தைப் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், சடலத்தைச் சிதைத்ததில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தின் போது சந்தேக நபரின் மகனும் அந்த இடத்தில் இருந்ததால், அவர் இரண்டாவது சந்தேக நபராகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். தற்போது இந்த வழக்கு தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Related News

அஸாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகள்: சிறப்புக்குழு முதலில் விசாரிக்கட்டும் - பிரதமர் அன்வார்

அஸாம் பாக்கி மீதான குற்றச்சாட்டுகள்: சிறப்புக்குழு முதலில் விசாரிக்கட்டும் - பிரதமர் அன்வார்

இனவாதக் கருத்துக்களைப் பரப்பும் 50-க்கும் மேற்பட்ட கணக்குகள் அடையாளம்: அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் எச்சரிக்கை

இனவாதக் கருத்துக்களைப் பரப்பும் 50-க்கும் மேற்பட்ட கணக்குகள் அடையாளம்: அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் எச்சரிக்கை

செந்தூலில்  வீடற்ற பெண் கொலை: கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிப்பு என போலீஸ் உறுதி

செந்தூலில் வீடற்ற பெண் கொலை: கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிப்பு என போலீஸ் உறுதி

கோலாலம்பூர் போக்குவரத்து இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு: 24 மணிநேர கண்காணிப்பில் போலீசார்

கோலாலம்பூர் போக்குவரத்து இரு மடங்காக அதிகரிக்க வாய்ப்பு: 24 மணிநேர கண்காணிப்பில் போலீசார்

மலாக்கா: பூங்கா கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை - 18 வயது இளம் பெண் கைது

மலாக்கா: பூங்கா கழிப்பறையில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை - 18 வயது இளம் பெண் கைது

ஈப்போ-லுமுட் சாலை விபத்து: 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலி

ஈப்போ-லுமுட் சாலை விபத்து: 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலி