மச்சாப்,ஆகஸ்ட் 26-
இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் மாது ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம், இன்று பிற்பகல் 1.15 மணியளவில் மச்சாப், ஐயர் ஹிதம், மேம்பாலத்தில் நிகழ்ந்தது.
Hino ரக லோரி மோதியதில் Honda HRV காரில் பயணித்த 46 வயது மாது சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சின்னாபின்னமான காரிலிருந்து அந்த மாதுவின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.








