கோலாலம்பூர், கம்போங் செராஸ் பாரு, ஜாலான் குவாரி அருகே கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தனியார் நிறுவன கணக்காளரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் மற்றொரு சந்தேக நபரை காவல் துறை தேடி வருகின்றனர்.
இது குறித்து தலவல் அளித்த கோலாலம்பூர், காவல் துறைத் தலைவர் டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் குறிப்பிடுகயில், அந்த சந்தேக நபரின் அடையாளம் கண்டறியப்பட்டு விட்டதாகவும், கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இருவரை இன்று வரை தடுப்புக் காவலில் கைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தடுப்புக் காவல் தொடரப்படுவது குறித்தும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்தும் இன்னும் முடிவெடுக்கப்பட வில்லை என டத்தோ அல்லவுடீன் அப்துல் மஜிட் தெரிவித்தார்.








