மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழலால் உலகளாவிய எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் பெர்ரி போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணத்தை விதிக்க போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுப் பயனர்களுக்கு மட்டுமே இந்தக் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். உள்ளூர் வாசிகள் மற்றும் தினசரி வேலைக்குச் செல்பவர்களுக்கு இந்தக் கூடுதல் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் எரிபொருள் விலை 4 ரிங்கிட்டிற்கு மேல் உயரும் போது, 5 விழுக்காடு முதல் அதிகபட்சமாக 18 விழுக்காடு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இது பெர்ரி சேவை நிறுவனங்களின் லாபத்திற்காக அல்லாமல், எரிபொருள் விலை உயர்வால் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவே அமல்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் உலகளாவிய எண்ணெய் விலையின் சராசரிக்கு ஏற்ப இந்தக் கூடுதல் கட்டண விகிதம் மாற்றியமைக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.








