ஷா ஆலாம், டிசம்பர்.11-
கோத்தா கெமுனிங் டோல் சாவடியில் நேற்று இரவு, கட்டுப்பாட்டை இழந்த டிரேய்லர் லாரி ஒன்று, வேகமாக வந்து மோதியதில், அங்கிருந்த இரு கார்கள் பலத்த சேதமடைந்ததோடு, 7 பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு 9.17 மணியளவில் நடந்த இச்சம்பவத்தையடுத்து, அங்கு விரைந்த ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
டோல் சாவடி ஊழியர் உட்பட 7 பேர், இவ்விபத்தில் காயமடைந்ததாக ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்து ஏதும் இன்றி, நலமுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








