ஈப்போ, நவ.15-
பேரா தெங்காவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் நான்கு பல்லைக்கழக மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை, பேரா ஸ்ரீ இஸ்கண்டாரில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது பல்கலைக்கழகம் பயிலும் இரண்டு மாணவர்களையும் இரண்டு மாணவிகளையும் போலீசார் கைது செய்துள்ளதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சுல்காப்லி சாரியாட் தெரிவித்தார்.
20 க்கும் 22 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு மாணவர்களிடமிருந்து 86.5 கிராம் போதைப்பொருளை போலீசார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








