Feb 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவை குப்பைத் தொட்டியாக்க முயற்சி: போர்ட் கிள்ளானில் 201 டன் சட்டவிரோத மின்-கழிவுகள் பிடிபட்டன
தற்போதைய செய்திகள்

மலேசியாவை குப்பைத் தொட்டியாக்க முயற்சி: போர்ட் கிள்ளானில் 201 டன் சட்டவிரோத மின்-கழிவுகள் பிடிபட்டன

Share:

கிள்ளான், பிப்ரவரி.06-

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான AKPS, போர்ட் கிள்ளானில் மேற்கு ஐரோப்பாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்ய முயன்ற 201.3 டன் மின்னணு மற்றும் அபாயகரமான கழிவுகளைக் கைப்பற்றியுள்ளது. சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974-ன் கீழ் தடை செய்யப்பட்ட இந்தக் கழிவுகள், ஆய்வுக்குப் பின் திருப்பி அனுப்பப்பட உள்ளன.

பிடிக்கப்பட்ட ஒன்பது கொள்கலன்களில் ஐந்து கொள்கலன்களில் சிபியு (CPU), பிரிண்டர்கள் மற்றும் நகல் எடுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட 98 டன் எடையுள்ள மின்-கழிவுகள் இருந்தன. எஞ்சிய நான்கு கொள்கலன்களில் நசுக்கப்பட்ட வாகன உதிரிபாகங்கள் மற்றும் உலோகத் துண்டுகள் என 103 டன்களுக்கும் அதிகமான கலப்பு மின்-கழிவுகள் மற்றும் பட்டியலிடப்பட்ட கழிவுகள் கண்டறியப்பட்டன.

இந்தச் சட்டவிரோதக் கழிவுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் தரச் சட்டம் 1974-ன் கீழ் தடை செய்யப்பட்டவை என்பதால், அவற்றை மீண்டும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக AKPS கமாண்டர் Datuk Nik Ezanee Mohd Faisal தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், மலேசியாவை உலகின் குப்பைத் தொட்டியாக மாற்றுவதைத் தடுக்கவும் எல்லையோரக் கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அவர் மேலும் உறுதியளித்தார்.

Related News

தேசியத் திறன் மேம்பாட்டில் சீர்திருத்தம்: துணைப்பிரதமர் ஸாஹிட் ஹமிடி, அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனை

தேசியத் திறன் மேம்பாட்டில் சீர்திருத்தம்: துணைப்பிரதமர் ஸாஹிட் ஹமிடி, அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனை

துன் மகாதீர் இல்லம் திரும்ப அனுமதி: பகல் நேரங்களில் மட்டும் IJN-இல் சிகிச்சை தொடரும்

துன் மகாதீர் இல்லம் திரும்ப அனுமதி: பகல் நேரங்களில் மட்டும் IJN-இல் சிகிச்சை தொடரும்

வழக்கறிஞர் ராஜா சேகரன் உட்பட 11 பேர் புதிய நீதித்துறை ஆணையர்களாக நியமனம்

வழக்கறிஞர் ராஜா சேகரன் உட்பட 11 பேர் புதிய நீதித்துறை ஆணையர்களாக நியமனம்

சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான்: பிளஸ் நெடுஞ்சாலைகளில் தினமும் 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என கணிப்பு

சீனப் புத்தாண்டு மற்றும் ரமலான்: பிளஸ் நெடுஞ்சாலைகளில் தினமும் 22 லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என கணிப்பு

சீனப் புத்தாண்டு: டோல் கட்டணம் தள்ளுபடி மற்றும் விலை கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

சீனப் புத்தாண்டு: டோல் கட்டணம் தள்ளுபடி மற்றும் விலை கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்தியப் பிரதமரின் மலேசிய வருகை: பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சு அறிவிப்பு

இந்தியப் பிரதமரின் மலேசிய வருகை: பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சு அறிவிப்பு