ஆ௧ஸ்ட் 04-
உடல் பருமன் பிரச்சனைக்கான அறிக்குறிகள் இருக்கும் 40 வயதிற்கு மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று CUEPACS பரிந்துரைத்துள்ளது.
அரசு ஊழியர்களின் உடல் பருமன் பிரச்சனையைக் குறைக்க சுகாதார அமைச்சு, இளைஞர் மற்றும் விளையாட்டு துறை ஆகியவற்றுடன் இணைந்து சில திட்டங்களை அமல்படுத்தலாம் என்று CUEPACS தலைவர் Datuk Adnan Mat தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் உடல் நல ஆரோக்கியத்தை உறுதிச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, புத்ராஜெயாவில் பணி புரியும் அரசு ஊழியர்களில் 50 விழுக்காட்டினர் உடல் பருமன் மற்றும் அதிக எடையால் அவதிப்படுவதாக நாட்டின் தலைமைச் செயலாளர் Tan Sri Mohd Zuki Ali நேற்று தகவல் வெலியிட்டிருந்தார்.








