Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய எல்லையில் நடப்பது என்ன? போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் துணை போகிறதா காவல்துறை?
தற்போதைய செய்திகள்

மலேசிய எல்லையில் நடப்பது என்ன? போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் துணை போகிறதா காவல்துறை?

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.28-

சிங்கப்பூரில் மலேசியரான கே. தட்சிணாமூர்த்திக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய எல்லைக் கட்டுப்பாடுகளில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின் எல்லையை எப்படி எந்தவிதச் சோதனையும் இன்றிக் கடக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பினாங்கு மாநிலத்தின் பத்து காவான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு. "காவற்படை, குடிநுழைவு, சுங்க அதிகாரிகள் கடத்தல்காரர்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? அல்லது விவகாரத்தைத் தெரிந்து கொண்டே அவர்களைச் சிங்கப்பூருக்குள் செல்ல அனுமதித்தார்களா?" என்றும் அவர் சந்தேகம் எழுப்பினார்.

போதைப் பொருள் கடத்தல்காரர்களை எல்லையிலேயே கைது செய்து, பின்னணியில் உள்ள கும்பலை அடையாளம் காண, மலேசிய அதிகாரிகள் தங்கள் கண்காணிப்பையும் வளங்களையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும், ஏழை எளியவர்களைக் கடத்தல்காரர்களாகப் பயன்படுத்தப்படும் மோசடியை முறியடிக்கவும் அவசியம் என அவர் மேலும் கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்