கோலாலம்பூர், நவ.9-
லஞ்ச ஊழல் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தனது பார்வையையும், கவனத்தையும் கொண்டு இருக்கும் என்று அதன் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.
அமலாக்க அமைப்புகள், அதிகாரப்பூர்வமான புகார்களை ஏற்று அவற்றை ஆராய வேண்டிய கடப்பாட்டில் இருப்பதால் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்கள் பெரும்பாலும் கவனம் செலுத்தப்படுவதில்லை.
ஆனால், சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படும் பிரச்னைகள், முன்வைக்கப்படும் தகவல்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் தற்போது SPRM மிற்கு ஏற்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.








