Jul 2, 2026
Thisaigal NewsYouTube
இன்று நள்ளிரவு தொடங்குகிறது ரோன் 95 சலுகை திட்டம்: 16 மில்லியன் வாகன உரிமையாளர்கள் பயன் பெறுவர்- ஒவ்வொருவரும் மாதம் 18 ரிங்கிட்டை மீதப்படுத்தலாம்
தற்போதைய செய்திகள்

இன்று நள்ளிரவு தொடங்குகிறது ரோன் 95 சலுகை திட்டம்: 16 மில்லியன் வாகன உரிமையாளர்கள் பயன் பெறுவர்- ஒவ்வொருவரும் மாதம் 18 ரிங்கிட்டை மீதப்படுத்தலாம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் புடி 95 எனும் ரோன் 95 பெட்ரோல் சலுகைத் திட்டம் தொடங்குகிறது. மலேசியர்களுக்கு அரசாங்கம் வழங்கும் இந்த திட்டத்தின்படி, லிட்டருக்கு 2 ரிங்கிட் 05 காசாக இருக்கும் ரோன் 95 பெட்ரோல், ஒரு ரிங்கிட் 99 காசுக்கு விற்கப்படவிருக்கிறது.

ரோன் 95 பெட்ரோலை வாங்குவதற்கு மலேசியர்கள், முதல் முறையாகத் தங்களின் மைகார்ட் அட்டையை பயன்படுத்தவிருகின்றனர். மாதம் ஒன்றுக்கு 300 லிட்டர் வரை மலேசியர்கள் பெட்றோலைப் பெறலாம். இதன் மூலம் லிட்டருக்கு 6 காசு வீதம், மாதம் ஒன்றுக்கு 18 ரிங்கிட்டை ஒவ்வொரு மலேசியரும் மீதப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் வழி நாட்டில் 16 மில்லியன் வாகன உரிமையாளர்கள் பயன் பெறவிருக்கின்றனர். இதற்காக 34.5 பில்லியன் ரிங்கிட் இழப்பீட்டை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளவிருக்கிறது.

சலுகை விலையில் ரோன் 95 பெட்றோலைப் பெற, மலேசியர்கள் வழக்கம் போல் பணம் செலுத்துவதற்கு முன்பு பம்ப் இயந்திரத்தில் மைகாட்டைச் செருக வேண்டும் அல்லது முகப்பிடங்களில் பணம் செலுத்தும்போது மைகாட்டைக் காட்ட வேண்டும்.

அரசாங்கத்தின் இந்த புதிய திட்டத்தினால் விரயங்கள், ஊழல் போன்ற பழைய முறையின் கீழ் நிலவி பிரச்னைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு