May 6, 2026
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ பாதுகாப்புச் சோதனை இடமாற்றம் - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ பாதுகாப்புச் சோதனை இடமாற்றம் - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

Share:

புத்ராஜெயா, டிசம்பர்.30-

வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் ஒன்றில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், அதன் புறப்பாட்டு வாயில்களில், பாதுகாப்புச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.

உச்சக் கட்டப் பயணக் காலங்களில், தற்போது பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடமானது அதிக நெரிசலை ஏற்படுத்துவதால், இச்சோதனையானது புறப்பாட்டு வாயில்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றமானது Malaysia Airports Holdings Bhd, சுங்கத்துறை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், இந்த மாற்றத்தினால், பயணிகளின் பாதுகாப்புச் சோதனையில் எந்த ஒரு இடையூறும் ஏற்படாது என்றும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக பயணிகள் முழுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சு விளக்கமளித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்