Dec 30, 2025
Thisaigal NewsYouTube
கேஎல்ஐஏ பாதுகாப்புச் சோதனை இடமாற்றம் - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது
தற்போதைய செய்திகள்

கேஎல்ஐஏ பாதுகாப்புச் சோதனை இடமாற்றம் - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது

Share:

புத்ராஜெயா, டிசம்பர்.30-

வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் ஒன்றில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், அதன் புறப்பாட்டு வாயில்களில், பாதுகாப்புச் சோதனைகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.

உச்சக் கட்டப் பயணக் காலங்களில், தற்போது பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடமானது அதிக நெரிசலை ஏற்படுத்துவதால், இச்சோதனையானது புறப்பாட்டு வாயில்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மாற்றமானது Malaysia Airports Holdings Bhd, சுங்கத்துறை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதே வேளையில், இந்த மாற்றத்தினால், பயணிகளின் பாதுகாப்புச் சோதனையில் எந்த ஒரு இடையூறும் ஏற்படாது என்றும், விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக பயணிகள் முழுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து அமைச்சு விளக்கமளித்துள்ளது.

Related News

பிறை டோல் சாவடி சம்பவம்: கைது செய்யப்பட்ட தம்பதி கஞ்சா பயன்படுத்தியுள்ளனர்

பிறை டோல் சாவடி சம்பவம்: கைது செய்யப்பட்ட தம்பதி கஞ்சா பயன்படுத்தியுள்ளனர்

விமான டயர் வெடிப்பு: சுல்தான் அப்துல் ஹாலிம் விமான நிலைய ஓடுபாதை தற்காலிக மூடல்

விமான டயர் வெடிப்பு: சுல்தான் அப்துல் ஹாலிம் விமான நிலைய ஓடுபாதை தற்காலிக மூடல்

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மடானி அரசாங்கம் யாருக்கும் அஞ்சவோ, அடிபணியவோ செய்யாது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மடானி அரசாங்கம் யாருக்கும் அஞ்சவோ, அடிபணியவோ செய்யாது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

பந்திங் ஆடவர் சித்ரவதை வழக்கு: விசாரணை ஆவணங்கள் சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

பந்திங் ஆடவர் சித்ரவதை வழக்கு: விசாரணை ஆவணங்கள் சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

செல்லப் பிராணிகள் விவகாரம்: ஜிபிஎம் வணிக வளாகத்திற்கு எம்பிபிபி கட்டுப்பாடுகள் விதித்தது

செல்லப் பிராணிகள் விவகாரம்: ஜிபிஎம் வணிக வளாகத்திற்கு எம்பிபிபி கட்டுப்பாடுகள் விதித்தது

கெடா, பினாங்கில் கொலை, கொள்ளை: 'ரமேஸ் கும்பலை' சேர்ந்த 20 பேர் மீது குற்றச்சாட்டு

கெடா, பினாங்கில் கொலை, கொள்ளை: 'ரமேஸ் கும்பலை' சேர்ந்த 20 பேர் மீது குற்றச்சாட்டு