Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநில வரைபடத்தில் 25 புதிய நகரங்கள் இணைக்கப்பட்டன!
தற்போதைய செய்திகள்

பினாங்கு மாநில வரைபடத்தில் 25 புதிய நகரங்கள் இணைக்கப்பட்டன!

Share:

ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.17-

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு, பினாங்கு தனது நகர்புற வரைபடத்தை மறுவரையறை செய்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம் 25 புதிய நகரங்களை அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 4-ம் ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்ட இந்தத் திருத்தம் மூலம் மாநிலம் முழுவதும் 210,000 க்கும் மேற்பட்ட நில உரிமங்களும், 84,000 அடுக்குமாடி உரிமங்களும் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளன.

கடந்த 1966-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அசல் நகர அறிவிப்புகளை விட தற்போது பினாங்கு மாநில மக்கள் தொகையும், பொருளாதார வளர்ச்சியும் அதிகமாகியிருப்பதால், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சோவ் கோன் யோவ் தெரிவித்துள்ளார்.

இந்த விரிவாக்கத்தினால் தற்போது பினாங்கு மாநிலத்தில் மொத்தம் 42 நகரங்கள் உருவாகியுள்ளன. அவற்றில் 17 ஏற்கனவே இருந்த நிலையில், கூடுதலாக தற்போது 25 நகரங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்